எடப்பாடி கோஷ்டியிடம் என்னவெல்லாம் கேட்கலாம்? நிர்வாகிகளோடு ஓ.பி.எஸ் தீவிர ஆலோசனை
மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஆலோசனை நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓ.பி.எஸ் தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
வைத்திலிங்கம் தலைமையில் 7 அமைச்சர்கள் அடங்கிய குழுவை எடப்பாடி கோஷ்டி அமைத்துள்ளது. அவர்களுடன் பேபச்சு நடத்த தாங்களும் குழு அமைக்க உள்ளோம் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஆலோசனை நடத்தினர். தங்கள் தரப்பு குழுவின் டிமாண்டுகள் என்னென்ன, குழுவில் யார், யார் இருக்க வேண்டும் என்பது போன்றவை இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications