ஜீவநதி தாமிரபரணியை சுத்தப்படுத்தும் தூத்துக்குடி மக்கள்!
தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் சுத்தப்படுத்தும் பனியை ஆரம்பித்து வைத்தார்.
தூத்துக்குடி: மூன்று மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு, குப்பைகளை கொட்டுதல் உள்பட பல்வேறு வகைகளில் ஆறு மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றை தூய்மைபடுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் எதிரொலியாக நெல்லையில் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை நெல்லை ஆட்சியர் சந்தீப் தந்தூரி முயற்சியால் தாமிரபரணி ஆற்றைத் தூய்மை செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆறு ஓடும் முறப்பநாடு முதல் கடலில் கலக்கும் புன்னைக்காயல் வரை சுமார் 30 கி.மீ தொலைவுக்கு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதற்காக மாணவ, மாணவியர், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் அங்கு திரண்டனர். முதலில் அங்கிருந்த முட்செடிகள் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை முதல் கட்டமாக துவங்கியுள்ளோம். இந்த பணிகள் இரண்டாவது கட்டமாக ஆத்தூர் பகுதியில் இருந்து மருதூர் அணை வரை இனி வரும் நாட்களில் தொடர்ந்து நடக்கும். மேலும், விடுமுறை நாட்களில் அனைத்து தரப்பு மக்களின் ஓத்துழைப்புடன் இந்த பணி நடக்கும் என தெரிவித்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications