எங்களைப் பாத்தாலே பயம்... அதான் சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்
தமிழக சட்டசபை வளாகத்தில் கறுப்பு சட்டையோடு வலம் வந்த தங்க தமிழ்செல்வன், அவைக்குள் தங்களை அனுமதிக்க மறுப்பது கண்டனத்திற்கு உரியது என்று குற்றம் சாட்டினார்.
Recommended Video

சென்னை: அடையாள அட்டை வைத்திருந்தும் எங்களை அனுமதிக்க மறுத்தது கண்டிக்கக் தக்கது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை ஆளுநர் உரையோடு தொடங்கியது. அப்போது கறுப்பு சட்டையோடு வந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்செல்வனை அவைக்குள் விட போலீசார் மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன் தங்களைப் பார்த்தாலே ஆளுங்கட்சிக்குப் பயம் என்று கூறி கலாய்த்தார்.

பார்த்தாலே பயம்
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு எம்எல்ஏ உள்ளே இருப்பதைப் பார்த்தே எல்லோரும் பயந்து கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் எல்லோரும் போனால் அவ்வளவுதான்.

கோர்ட் தீர்ப்பு வரட்டும்
அதான் எங்களை உள்ளே விட மறுக்கின்றனர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரட்டும். என்னுடைய முகத்தை இந்த தமிழகத்திற்கே அடையாளம் தெரியுமே?

ஐடி காட்டியும் விடலைன்னா எப்படி
நான் அடையாள அட்டையை காட்டியும் எங்களை உள்ளே விட மறுக்கலாமா? இது கண்டனத்திற்கு உரியது. வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.

தகுதி நீக்கமானவர்கள்
தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் 18 பேரும் சட்டசபைக்குள் போக முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

18 பேரும் வந்தால் சிக்கல்
உயர்நீதிமன்றத்தில் இந்த தகுதி நீக்கம் செல்லாது என்று உத்தரவு வந்தால் அது தினகரன் தரப்புக்கு பெரும் சாதகமாக அமையும், ஆளுங்கட்சிக்கு பெரும் சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications