தமிழ் இன உணர்வாளர் ஓவியர் வீர சந்தானத்தின் உடல் தகனம்!
மறைந்த ஓவியரும், நடிகருமான வீரசந்தானத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: தமிழ் இன உணர்வாளரான ஓவியர் வீரசந்தானத்தின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஓவியர் வீரசந்தானம் மாரடைப்பால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 70.

கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயிலில் பிறந்த இவர், சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், சங்கீதா, சாலிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
மறைந்த வீரசந்தானம் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர். ஓவியத் துறையையும் தாண்டி தமிழ் உணர்வாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவராக திகழ்ந்தார்.
ஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளராக இருந்த இவர், பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
சந்தியா ராகம், அவள் பெயர் தமிழரசி, பீட்சா, கத்தி உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். 'தானே' புயலின்போது சென்னையில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
அவரது இறுதி ஊர்வலம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை மைலாப்பூர் கைலாசப்புரம் மின்மாயனத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications