ஒரே குற்றவாளி ராம்குமார் தற்கொலை.. சுவாதி கொலை வழக்கின் கடைசி சாப்டரை குளோஸ் செய்தது கோர்ட்!
சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட ராம்குமார் மரணம் அடைந்துவிட்டதால் அந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி (24). அவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அவரது பணியிடத்துக்கு செல்வார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சுவாதியை அவரது தந்தை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார்.

பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்திலேயே சுவாதியை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது தமிழகத்தையே உலுக்கியதோடல்லாமல் அந்த சுவாதி கொல்லப்பட்டதை பார்த்த அனைவரின் நெஞ்சமும் பதைபதைத்தது.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவம் இடம் விரைந்த சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சுவாதியை கொன்ற குற்றவாளி குறித்து துப்புக் கிடைத்தது.
இதைதொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை போலீஸார் சுற்றி வளைத்தனர். பின்னர் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி சிறையில் இருந்த மின்கம்பியை பல்லால் கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சுவாதியின் கொலை வழக்கானது எழும்பூர் நீதி்மன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது.
அப்போது ராம்குமார் மரணம் தொடர்பான ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை அடுத்து, குற்றவாளி என கருதப்பட்ட ராம்குமார் தற்போது உயிருடன் இல்லாததால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கின் ஒரே குற்றவாளி ராம்குமார்தான் என போலீசார் கூறியதை ஏற்று வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications