தனிக்குடித்தனம் போக சொல்லி தகராறு.. 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
தென்காசி: தனிக்குடித்தனம் போக வேண்டும் எதென்காசி: தனிக்குடித்தனம் போக வேண்டும் என வீட்டில் தகராறு ஏற்பட்டதால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்வம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

வீட்டில் தனிக்குடித்தனம் போவது குறித்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனிடேயே நேற்று காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் வாசலில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார் குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தான், தனிக்குடினத்தனம் செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜ்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications