பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் வருடாந்திர தேர் பவனி விழா சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை தரிசித்து அருள் பெற்றனர்.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 42-வது ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி தேவ அழைத்தல் விழாவும், 2-ம் தேதி துறவற சபைகள் விழாவும், 3-ம் தேதி ஆசிரியர்கள் விழாவும், 4-ம் தேதி பக்தியில் மலரும் குடும்ப விழாவும், 5-ம் தேதி இளைஞர்கள் விழாவும், 6-ம் தேதி நலம் பெறும் விழாவும் என ஒவ்வொரு நாளும் விழாக்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்பவனிக்கு உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.
இதில் அன்னை வேளாங்கண்ணி மாதா சிலை அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கு ரதத்தில் பெசன்ட் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்தது. இதை வழிநெடுக எங்கிலும் கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் ஆசீர் பெற்றனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று திங்கட்கிழமை அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா மற்றும் அன்னைக்கு முடிசூட்டு விழாவும், அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கு விழாவும் நடைபெற்றது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications