உருப்படியான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.. ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
உருப்படியான எந்தத் திட்டமும் தமிழக பட்ஜெட்டில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: 2017-18ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களும் விமர்ச்சித்து வருகின்றனர்.
தமிழக பட்ஜெட் குறித்து தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

முறைசாரா தொழிலாளர்
முறைசாரா தொழிலாளர்கள் 68 லட்சத்து 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். 115 கோடி ரூபாய் நல உதவித் தொகை வழங்கி இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், நல உதவித் தொகைக் கேட்டு மனு கொடுத்தோர் எண்ணிக்கை என்பது 2 லட்சத்து 70 ஆயிரம் பேர். கடந்த ஆண்டு உதவித் தொகை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு இன்னும் உதவித் தொகை வழங்கப்பட வில்லை. எனவே, மாநில அரசு தற்போது ஒதுக்கியுள்ள தொகை போதுமானதல்ல.

வேலைவாய்ப்பு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக மாநில அரசு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. மாநிலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் வேலையற்றவர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை.

பள்ளிக் கல்வி
பள்ளிக் கல்வித் துறை பற்றிய தகவல்கள் பட்ஜெட்டில் தமிழக அரசு மறைத்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த நிதி ஒதுக்கிட்டில் எந்தத் திட்டமும் இல்லை.

சிறு குறு தொழில்கள்
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு குறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை போக்குவதற்காக எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. மேலும் சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்கக் கூடிய திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. மேலும், அந்த துறைக்காக 535 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதும் போதுமானதாக இல்லை.

ஜீரோ பட்ஜெட்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கோ மக்கள் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதற்கோ எந்த திட்டமும் இல்லை. மாநில அரசிற்கு ஏற்கனவே கடன் சுமை அதிகரித்துள்ளது. அந்த கடன் சுமையை தீர்க்க என்ன வழி, வேலையின்மையை போக்க என்ன வழி என்பது குறித்து பட்ஜெட்டில் கொடுக்கவில்லை என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications