சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்... தமிழக முன்னாள் ஆளுநரின் புத்தகத்தின் தகவல்
சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலாவை ஆட்சி அமைக்க தான் ஏன் அழைக்கவில்லை என்பது குறித்து தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 3 முதல்வர்களை பார்த்த ஒரே ஆளுநர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் வித்யாசாகர் ராவ்.
தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை வந்தபோதெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல் மிகவும் நிதானமாக ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்டு முடிவுகளை எடுத்திருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஜெயலலிதா மறைவு.

அசாதாராண சூழல்
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வந்தது. முதல்வராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் நிர்பந்தத்தின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஜெ.சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ் அதன் பிறகு தனி அணியாக செயல்பட்டார். 122 எம்எல்ஏக்களை கொண்ட சசிகலா ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து கோரினார். அதேவேளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தருமாறு முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸும் கேட்டுக் கொண்டார். இரு கடிதங்களையும் பெற்றுக் கொண்ட ஆளுநர் மும்பை பறந்தார்.

சசிகலாவுக்கு அழைப்பில்லை
பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு சசிகலாவின் பக்கம் இருந்தபோதிலும் ஆளுநர் சென்னைக்கு வராமலும், ஆட்சி அமைக்க அழைக்காமலும் இருந்தார். இதற்கு சசிகலா தரப்பினர் ஆளுநரை கடுமையாக கடிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது என அனைத்தும் நாம் அறிந்ததே.

புது ஆளுநர் நியமனம்
தமிழகத்தில் மேலும் அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து நிரந்தர ஆளுநராக
பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக இருந்த காலத்தில் தனது முக்கியமான நிகழ்ச்சிகள் குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். அதை சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக் கொண்டார்.

மொத்தம் 12 அத்தியாயங்கள்
வித்யாசாகர் எழுதிய முக்கியமான அந்த நாட்கள் என்ற புத்தகத்தில் மொத்தம் 12 அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயத்தில் ஜெயலலிதாவை தன்னை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றது. ஜெயலலிதா முன்னிலையில் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்றது ஜெயலலிதா உடனான நட்பு உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2-ஆவது அத்தியாயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

6-ஆவது அத்தியாயத்தில்...
சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து 6-ஆவது அத்தியாயத்தில் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை நிலை நிறுத்தியது என்ற தலைப்பில் உள்ள அந்த அத்தியாயத்தில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியதை கையாண்ட விதம் குறித்து அவர் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தவரை ஆட்சி அமைக்க இயலாத சூழலில் அரசியல் சாசனபடி செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications