மே 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
காவிரி வழக்கில் மே 16ல் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சேலம் : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், மே 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இருந்து தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி சிங் காவிரி நதி நீர் பங்கீட்டிற்கான திட்ட வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

மேலும், காவிரி வாரியம் அல்லது குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதை ஏற்கத்தயார் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக மற்றும் கர்நாடக வழக்கறிஞர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதில் அளிக்க நான்கு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, மே 16ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலத்தில் இருந்து திருப்பதி செல்வதற்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மே 16ம் தேதி காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும், காவிரி வாரியமும், நதி நீர் பங்கீட்டு அமைப்பும் அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications