உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு... சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்!
உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2வது முறையாக நீட்டிப்பு செய்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. எனவே, புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால், அறிவிக்கப்பட்ட தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனது. எனவே, உள்ளாட்சி அமைப்பு பணிகளை தொய்வின்றி கவனிக்கும் வகையில், தனி அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு அதாவது ஜூன் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதுவரை உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறைகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவிற்கும் மசோதாவிற்கும் எதிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதற்கான மசோத சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications