சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம்: ஆளுநர் பன்வரிலால் புரோஹித்
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
சென்னை : சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
2018ம் ஆண்டிற்கான முதல் சட்டசபைக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை துவக்கி வைத்து பேசினார். அதில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

ஹார்வார்டு பல்கலைகழகத்திற்கு தமிழ் இருக்கை வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் பாராட்டினார். மேலும், தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து உள்ளதாகவும் அது விரைவில் செயல்பாட்டு வரும் என்றும் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் வாழ்வுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்றும் பாராட்டுக்குரியது என்றும், அவரின் பெயர் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
கோதாவரி நதி நீரை காவிரி நதியோடு இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்கி இருப்பதை தமிழக அரசு சார்பில் வரவேற்பதாகவும், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை இந்த ஆட்சி தொடங்கு வழங்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications