சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம்: ஆளுநர் பன்வரிலால் புரோஹித்
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
சென்னை : சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
2018ம் ஆண்டிற்கான முதல் சட்டசபைக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை துவக்கி வைத்து பேசினார். அதில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

ஹார்வார்டு பல்கலைகழகத்திற்கு தமிழ் இருக்கை வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் பாராட்டினார். மேலும், தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து உள்ளதாகவும் அது விரைவில் செயல்பாட்டு வரும் என்றும் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் வாழ்வுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்றும் பாராட்டுக்குரியது என்றும், அவரின் பெயர் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
கோதாவரி நதி நீரை காவிரி நதியோடு இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்கி இருப்பதை தமிழக அரசு சார்பில் வரவேற்பதாகவும், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் அதிமுக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை இந்த ஆட்சி தொடங்கு வழங்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications