கேரளாவின் குற்றச்சாட்டை விடுங்க.. தமிழக அரசின் தயாள மனசைப் பாருங்க.. 1 லட்சம் லிட்டர் குடிநீர்!
கேரளாவுக்கு தமிழக அரசு 1 லட்சம் குடிநீர் அனுப்பி வைத்துள்ளது.
சென்னை: என்னதான் தமிழக அரசு மீது கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வாரி வீசினாலும், நம் தரப்பில் அவர்களுக்கு அளித்து வரும் ஆதரவும், உதவிகளும் குறையாமல்தான் நீண்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் 1 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும் காரணம்
இடுக்கி அணையை கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடாமல், இப்படி ஒரேடியாக மொத்தமாக திறந்துவிட்டதும் எங்கள் வெள்ள பாதிப்புக்கு ஒரு காரணம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது கேரளா ஒரே போடாக போட்டது.

சுருக்கென்ற வார்த்தை
பெருமளவு உதவிகள் தமிழகத்திலிருந்து கேரளத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் இந்த பழி மற்றும் அவச்சொல் வந்து விழுந்தது. ஆனாலும் கேரளாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி உரிய விளக்கம் அளித்து அதற்கு பதில் அளித்திருந்தார். என்ன விளக்கம் அளித்தாலும், வெள்ளத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு, இன்னமும் சுருக்கென்றேதான் உள்ளது.

மீண்டு வரும் கேரளம்
அம்மாநிலத்தில் வெள்ளம் என்று அறிந்தவுடன் தமிழக அரசு சார்பில், ரூ. 10 கோடி வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிதி உதவி தவிர பிற உதவிகள் அதாவது, அரிசி, தானியங்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 42 விதமான நிவாரண பொருட்கள் ரூ.4 கோடி மதிப்பில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது வெள்ள மீட்பு பணிகள் கேரளாவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கேரளாவை சீரமைத்தே தீருவது என பலரும் அதிதீவிரத்தில் இறங்கியுள்ளனர்.

1 லட்சம் லிட்டர் குடிநீர்
இந்நிலையில் கேரள மக்களுக்கு தேவையான 1 லட்சம் அம்மா குடிநீர் கேரளாவுக்கு நேற்றுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 லாரிகளில் இந்த தண்ணீர் ஏற்றப்பட்டு அதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து அனுப்பி வைத்தார். "யார் பாதிக்கப்பட்டாலும் முதலில் சென்று தமிழக மக்கள் உதவி செய்து வருகிறார்கள், அதற்கு தமிழக அரசும் துணையாக இருக்கிறது" என்று செய்தியாளர்களிடம் அப்போது வேலுமணி தெரிவித்தார். அமைச்சர் கூறிய இந்த வார்த்தைகளில் உள்ள உண்மை பொருளை கேரளம் விரைவில் புரிந்து கொள்ள முன்வரவேண்டும்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications