என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும்? திருமுருகன் காந்தி
ஈழப் போரின் போது மறைந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரும் தடை விதிக்க முடியாது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
சென்னை: என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும் எமக்கு என்று மே 17 இயக்கத்தின் நிறுவனம் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
"என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும் எமக்கு.. மிரட்டல்களுக்கு அஞ்சி பணிந்திட ஆட்டுக்கூட்டமல்ல... புலிகளின் துணிவோடு தமிழர் கடலை மீட்டெடுப்போம்" என்ற தலைப்போடு தனது பேஸ்புக் பக்கத்தில் திருமுருகன் காந்தி பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இதோ:
நினைவேந்தல் என்பது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு பண்பாட்ட நிகழ்வு. இது காலம் காலமாக நடந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக நீர் நிலையோரம் மரியாதை செலுத்துவது தமிழர்களின் மரபு.

ஆதிச்சநல்லூர் சான்று
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிச்சநல்லூரில் இந்த வழக்கம் இருந்ததற்கான சான்று இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றோரம்தான் உள்ளது. அந்த இடம் இறந்தவர்களை புதைக்கும் இடமாகத்தான் இருந்துள்ளது. அப்படிப்பட்ட பண்பாடு நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் உள்ளது.

இயற்கை உரிமை
அந்த அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களான நம் உறவினர்களுக்கு கடலோரம் அஞ்சலி செலுத்துகிறோம். இதனை எந்த சட்டத்தாலும் தடுத்துவிட முடியாது. ஏனென்றால் இது இயற்கையாக இருக்கக் கூடிய உரிமை இது.

ஐ.நா. உறுதி
இந்த சட்டங்கள் எல்லாம் வருவதற்கு முன்பிருந்த பழக்கமான இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. பிறப்பின் போது, திருமணத்தின் போது, இறப்பின் போது பின்பற்றப்படும் மரபுகளுக்கு உலகத்தில் உள்ள எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை என்று ஐ.நா.வே சொல்லி இருக்கிறது.

ஜெ.விற்கு அஞ்சலி
இன்றும் மெரினாவிற்கு யார் சென்றாலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடியும். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதிக்கு அனைவரும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

திட்டமிட்ட சதி
ஆக, இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுப்பதே சட்டவிரோதம். மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செய்வது தடுக்க திட்டமிட்டப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கக் கூடாது.

அயோக்கியத்தனம்
போர் நடந்த போது போராடுவதற்கு அனுமதிக்காத அரசு, இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதையும் தடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இது அடிப்படை உரிமை மீறல். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?

பாஜக வேலை
பாஜகவும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசும் சேர்ந்துதான் தடுக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது தமிழர்களின் உரிமை. 5000 ஆண்டுகளாக கடற்கரை உள்ளிட்ட நீர்நிலையோரம் மரியாதை செலுத்துவது உரிமை.

சட்ட விதி மீறல்
இனப்படுகொலையை நினைவுபடுத்தி அதற்காக அஞ்சலி செலுத்துவது எங்களது உரிமை. ஈழத்தில் கடற்கரையோரம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதனை தடுத்ததற்காக இலங்கை அரசை ஐ.நா. கண்டித்துள்ளது. அதே வேலையை இங்கு செய்வது சட்டவிதி மீறல் குற்றமாகும்.
பொய்ப் பிரச்சாரம்
எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செலுத்த வாருங்கள். பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்திற்கோ, மாநில அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கோ ஒரு போதும் செவிமடுக்காதீர் என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications