செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம் ... ஹைகோர்ட்டில் தினகரன் தரப்பு வாதம்
செங்கோட்டையனை முதல்வராக்க ஆளுநரிடம் மனு அளித்ததாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.
சென்னை : செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என விரும்பி தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு அளித்ததாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, டிடிவி தினகரனையும், சசிகலாவையும் ஓரங்கட்டியதால் இவர்களது ஆதரவாளர்கள் 18 பேர் தனித்து செயல்பட்டனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று 18 பேரும் தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர்.

இந்நிலையில் கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறி 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஆளுநரிடம் கொடுத்த மனு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்.
எங்கள் மீதான புகார் தொடர்பாக கொறடா, முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரப்பட்டது. செங்கோட்டையனை முதல்வராக்க ஆளுநரிடம் மனு அளித்தோம்.
ஆளுநரிடம் மனு அளித்ததை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்துள்ளனர். பல முறைகேடுகளில் சிக்கி இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறுகையில், 3-இல் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் கூட இல்லாதவர்கள் அதிமுக என உரிமை கோர முடியாது.
கட்சியில் இருந்து பிரிந்து சென்று மற்றொரு குழுவாக செயல்பட்டனர். கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்ததில் தவறே இல்லை என்றார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை ஜனவரி 12-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications