தூத்துக்குடி மாணவி புனிதா கொலை வழக்கு: அக். 20க்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் அருகே பலத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி புனிதா கொலை வழக்கு அக் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்திரபாண்டி - இசக்கியம்மாள் தம்பதியரின் மகள் புனிதா. இவர் நாசரேத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20.12.2012ல் பள்ளிக்கு சென்ற புனிதா திடீரென மாயமானார்.
இந்த நிலையில் தாதன்குளம் காட்டு பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்டது. செய்துங்கநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் புனிதா பாலியல் பலத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மணியாச்சி அருகே உள்ள பாறை கூட்டத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 20 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதில் புனிதாவின் தாய், தாத்தா, தோழிகள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர், போலீஸ் அதிகாரிகள், ஆய்வக பரிசோதனை செய்த நிபுணர்கள் என பலர் இடம் பெற்றிருந்தனர்.
தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வந்தது. 3 கட்டமாக 20 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பால்துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பையா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி பால்துரை விசாரணை நடத்தி இந்த வழக்கை அக் 20ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
டெல்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவமாணவி கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் நடைபெற்ற இந்த புனித கொலை வழக்கில் இன்னும் சரியான அளவில் விசாரணையே நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications