தூத்துக்குடியில் கோயில் பூசாரி, எஞ்சினியர் வெட்டி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோயில் பூசாரியும், எஞ்சினியரும் வெட்டிகொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. ஓய்வு பெற்ற பொறியாளர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி அருகேயுள்ள செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமம். செல்லத்துரை சிறிய வயதிலேயே சென்னைக்கு சென்று விட்டார்.
ஓய்வு பெற்ற பிறகு தனது கிராமத்தில் தனது குல தெய்வமான குலை கொண்ட அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். வடந்தோறும் வருஷாபிஷேகமும் செய்து வந்தார். பவுர்ணமி தோறும் இந்த கோயிலில் நடக்கும் பூஜையில் அவர் கலந்து கொள்வது வழக்கம்.
வழக்கம் போல் அவர் மாலை 5 மணிக்கு வந்த அவர் அங்கு கோயிலில் வேலை பார்த்து கொண்டிருந்ததா கூறப்படுகிறது. அவருக்கு உதவியாக அந்த கோயிலில் பூசாரியாக இருக்கும் ஆவுடை முத்துசெல்வி இருநதுள்ளார். அப்போது ஒரு கும்பல் கோயிலுக்குள் அதிரடியாக புகுந்தது.
கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் இருந்த செல்லத்துரையை இழுத்து போட்டு வெட்டியது. இதை பார்த்து தடுக்க ஓடி வந்த ஆவுடைமுத்து செல்வியையும் அந்த கும்பல் வெட்ட முயன்றது. சுதாரித்து கொண்ட அவர் கோயில் கம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் தோட்டத்துக்குள் வைத்து அவரை சராமரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்லத்துரையை மீ்ட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். எஸ்பி துரை, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications