தூத்துக்குடியில் கோயில் பூசாரி, எஞ்சினியர் வெட்டி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோயில் பூசாரியும், எஞ்சினியரும் வெட்டிகொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. ஓய்வு பெற்ற பொறியாளர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி அருகேயுள்ள செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமம். செல்லத்துரை சிறிய வயதிலேயே சென்னைக்கு சென்று விட்டார்.
ஓய்வு பெற்ற பிறகு தனது கிராமத்தில் தனது குல தெய்வமான குலை கொண்ட அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். வடந்தோறும் வருஷாபிஷேகமும் செய்து வந்தார். பவுர்ணமி தோறும் இந்த கோயிலில் நடக்கும் பூஜையில் அவர் கலந்து கொள்வது வழக்கம்.
வழக்கம் போல் அவர் மாலை 5 மணிக்கு வந்த அவர் அங்கு கோயிலில் வேலை பார்த்து கொண்டிருந்ததா கூறப்படுகிறது. அவருக்கு உதவியாக அந்த கோயிலில் பூசாரியாக இருக்கும் ஆவுடை முத்துசெல்வி இருநதுள்ளார். அப்போது ஒரு கும்பல் கோயிலுக்குள் அதிரடியாக புகுந்தது.
கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் இருந்த செல்லத்துரையை இழுத்து போட்டு வெட்டியது. இதை பார்த்து தடுக்க ஓடி வந்த ஆவுடைமுத்து செல்வியையும் அந்த கும்பல் வெட்ட முயன்றது. சுதாரித்து கொண்ட அவர் கோயில் கம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் தோட்டத்துக்குள் வைத்து அவரை சராமரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்லத்துரையை மீ்ட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். எஸ்பி துரை, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications