பாஜக கன்னத்தில் தேர்தல் ஆணையம் விட்ட பளார் அறை... வைகோ அதிரடி!
குஜராத் ராஜ்யசபா தேர்தல் முடிவின் மூலம் பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் கன்னத்தில் அறை வழங்கியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: குஜராத் ராஜ்யசபா தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நீதி போதனை செய்யும் மோடி, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நீதி தவறிவிட்டார் என்றார்.

ஜனநாயகத் திருடர்கள்
தொடர்ந்து பேசிய வைகோ, ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி போட்டியிட்டனர். அவர்களின் வெற்றி வாய்ப்பு உறுதிதான். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏன் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டும். 6 எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் கைப்பற்றியது பாஜக. பாஜகவிற்கு வாக்களித்த 2 எம்எல்ஏக்கள் ஜனநாயகத் திருடர்கள்.

நீதி போதனை
பிரதமர் மோடி மாதம் ஒருமுறை வானொலியில் பேசுகிறார், நீதி போதனை செய்கிறார். வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி தம்பட்டம் அடிக்கிறார் மோடி. ஆனால் குறுக்குவழியில் மாநிலங்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறார்.

எமர்ஜென்சி
எத்தனையோ நெருக்கடி நிலையை நாடு சந்தித்து உள்ளது. இப்போது பாஜக அரசின் மூலம் மிகப்பெரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. மாநில அரசின் சுதந்திரம் பறிபோய் உள்ளது.

தர்மம் வெல்லும்
தேர்தல் ஆணையத்தின் முடிவால் நீதி வென்றுள்ளது. மோடியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. தர்மம் எப்படியும் வெல்லும் என்பதை குஜராத் தேர்தல் நிரூபித்துள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
-
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications