பாஜக கன்னத்தில் தேர்தல் ஆணையம் விட்ட பளார் அறை... வைகோ அதிரடி!
குஜராத் ராஜ்யசபா தேர்தல் முடிவின் மூலம் பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் கன்னத்தில் அறை வழங்கியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: குஜராத் ராஜ்யசபா தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நீதி போதனை செய்யும் மோடி, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நீதி தவறிவிட்டார் என்றார்.

ஜனநாயகத் திருடர்கள்
தொடர்ந்து பேசிய வைகோ, ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி போட்டியிட்டனர். அவர்களின் வெற்றி வாய்ப்பு உறுதிதான். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏன் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டும். 6 எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் கைப்பற்றியது பாஜக. பாஜகவிற்கு வாக்களித்த 2 எம்எல்ஏக்கள் ஜனநாயகத் திருடர்கள்.

நீதி போதனை
பிரதமர் மோடி மாதம் ஒருமுறை வானொலியில் பேசுகிறார், நீதி போதனை செய்கிறார். வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி தம்பட்டம் அடிக்கிறார் மோடி. ஆனால் குறுக்குவழியில் மாநிலங்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறார்.

எமர்ஜென்சி
எத்தனையோ நெருக்கடி நிலையை நாடு சந்தித்து உள்ளது. இப்போது பாஜக அரசின் மூலம் மிகப்பெரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. மாநில அரசின் சுதந்திரம் பறிபோய் உள்ளது.

தர்மம் வெல்லும்
தேர்தல் ஆணையத்தின் முடிவால் நீதி வென்றுள்ளது. மோடியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. தர்மம் எப்படியும் வெல்லும் என்பதை குஜராத் தேர்தல் நிரூபித்துள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications