எம்.எல்.ஏ. அவர்களே! ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள்.. பரபர 'வேடசந்தூர்' வாக்காளர்களின் போஸ்டர்!
முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று வேடசந்தூர் வாக்காள பெருமக்கள் அத்தொகுதி எம்எல்ஏ வி.பி.பி. பரமசிவத்திற்கு போஸ்டர் அடித்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.
வேடசந்தூர்: தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. தலைவர்கள் ஆதரவு மட்டுமல்லாமல் பொதுமக்களின் ஆதரவு அவருக்கு பலம் சேர்த்து வருகிறது.
அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு ஓபிஎஸ் அணியாகவும், சசிகலா அணியாகவும் பிரிந்து கிடக்கும் நிலையில், எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சொல்லாமல் அமைதி காத்தி வருகிறார்கள். எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் மன்னார்குடி அடியாட்கள் எம்எல்ஏக்களை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, வேடசந்தூர் தொகுதி வாக்காள பெருங்குடி மக்கள் தாங்கள் விரும்பியதை அழகான போஸ்டரில் அச்சடித்து வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியில், தமிழக முதல்வராக ஓபிஎஸ்ஸுக்கும், அதிமுகவின் தலைவராக தீபாவிற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவிற்கு அன்பு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏவான வி.பி.பி. பரமசிவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அந்த சுவரொட்டி வேண்டுகோளில் முடிவில் இவண் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள் மற்றும் தங்களுக்கு வாக்களித்த வேடசந்தூர் சட்டமன்ற வாக்காள பெருமக்கள் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.
இதுதவிர, எம்எல்ஏ பரமசிவத்திற்கு வேடசந்தூர் தொகுதி மக்கள் தங்களது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம், ஓபிஎஸ்ஸை ஆதரிக்க வேண்டும் என்ற தகவல்களையும் அனுப்பி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications