வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை
Recommended Video

திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2001-2006 ஆம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆண்டிவேல். வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயலராகவும் 10 ஆண்டுக்கும் மேல் இருந்து வந்தார்.
ஈமு கோழி வளர்ப்பு மோசடி புகார்கள் ஆண்டிவேல் மீது எழுந்தன. இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார் ஆண்டிவேல்.

ஆண்டிவேல் தொடர்பு துண்டிப்பு
இந்நிலையில் எரியோடு அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு நேற்று வந்தவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தோட்ட வீட்டில் சடலம்
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள வீட்டின் ஒரு அறையில் தாடையில் வெட்டுக் காயத்துடன் ஆண்டிவேல் இறந்து கிடந்தார்.

வேடசந்தூரில் பிரேத பரிசோதனை
இது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. எரியோடு போலீசார் ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டிக் கொலையா? மாரடைப்பா?
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார், தாடையில் வெட்டப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து வெட்டு காயம் ஏற்பட்டதா? என விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஈமு கோழி விவகாரத்தில் ஆண்டிவேலிடம் ஏமாந்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications