டெங்கு கொசு ஒழிப்புக்கு கமிஷன் கேட்ட வேலூர் மாநகராட்சி கமிஷனர்.. கைது செய்து தூக்கிய போலீஸ்!
லஞ்சம் வாங்கிய புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் : வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர் லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.
வேலூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவேன் என்று செயல்பட்டு வந்த மாநகராட்சி ஆணையர் குமார் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கான்ட்டிராக்டர் ஒருவருக்கு பணியாட்களை அனுப்பிய விவகாரத்தில் ஊதியத்தை கேட்டதற்கு 2 கமிஷன் லஞ்சமாக கேட்டுள்ளார் குமார். ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் சிக்கிக் கொண்டார்.
வேலூர் வேலப்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஆட்களை பணியில் சேர்த்து விடும் கான்டிராக்டராக உள்ளார். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பியுள்ளார். இதற்காக, பாலாஜிக்கு ரூ.10.23 லட்சம் வழங்க வேண்டும்.

ஊதியப் பணத்துக்கு கமிஷன்
பணியாளர்களின் ஊதியப் பணத்தை வழங்க 2 சதவீத கமிஷன் அடிப்படையில் ரூ. 22 ஆயிரத்தை இன்று வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் குமார். இது குறித்து பாலாஜி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

ஸ்பாட்டில் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை
இதனையடுத்து அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்ட நேரத்தில் ரூ. 22 ஆயிரத்தை பாலாஜி ஆணையர் குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக குமாரை கைது செய்துள்ளனர்.

வீட்டில் சோதனை
இதனிடையே ஆணையர் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். உயர் பதவியில் உள்ள ஒருவரே லஞ்சம் வாங்கி இருப்பதால் இவர் மீது மேலும் சந்தேகம் வலுத்ததையடுத்து அவரது வீட்டிலும் ஏதேனும் வேறு லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

குப்பைத்தொட்டி ஊழல்
ஆணையர் குமார் மீது ஏற்கனவே குப்பைதொட்டி வாங்கியதில் ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குமாரின் வீட்டில் நடக்கும் சோதனையின் முடிவிலேயே அவர் யார் யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கியுள்ளார் என்ற முழு விவரம் தெரிய வரும். எனினும் உள்ளாட்சிப் பணிகளை முழுவதும் கவனித்து வரும் மாநகராட்சி ஆணையரே இது போன்று லஞ்சப் பேயாக இருப்பது வேலூர் மாநகர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications