விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா? ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குக - தி. வேல்முருகன்
வறட்சியினால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் காவிரி டெல்டா மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை.
தற்போதுதான் தமிழக அமைச்சர்கள் வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். அப்படி ஆய்வுக்கு சென்ற அமைச்சர்களில் சிலர், விவசாயிகள் நோய்வாய்பட்டு இறந்துபோனதாக கூறியிருப்பதாக பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அமைச்சர்களின் இத்தகைய பேச்சுகள் விவசாயிகள் மட்டுமின்றி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருக்கிறது. அமைச்சர்கள் வீண் பேச்சுகளை தவிர்த்து விவசாயிகளின் துயரைத் துடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை.
அண்டை மாநிலங்களான கர்நாடகாவும் கேரளாவும் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து தங்களது மாநிலங்களுக்கான வறட்சி நிவாரண நிதியின் ஒரு பகுதியை பெற்றுவிட்டனர். ஆனால் தமிழக அரசோ வறட்சி நிலைமை குறித்து இப்போதுதான் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறது.
அத்துடன் விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர்களும் பேசிவருகின்றனர். இத்தகைய போக்கை கைவிட்டு உடனடியாக எத்தனை விவசாயிகள் மரணித்துப் போயுள்ளனர் என்பது தொடர்பாக தமிழக முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும்.
மாண்டுபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ25 லட்சம் நிவாரண நிதியை உடனே வழங்கிட வேண்டும்; விவசாய குடும்பங்களின் அத்தனை கடன்களையும் ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications