ஐபிஎல்: மைதானத்தில் பாம்பு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல- வேல்முருகன் எச்சரிக்கை
ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாம்பு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

நாகை: ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை ஸ்டேடியத்துக்கு பாம்பு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் இன்று நடத்தப்படுகின்றன.
ஐபிஎல் போட்டிகளை நேரில் கண்டு களிக்க வேண்டாம் என்று தன்னார்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

உணர்த்துவோம்
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளை பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து மைதானமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை டிவியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வந்தனர்.

ரஜினிகாந்த் பேட்டி
இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக கூறிவிட்டார். வீரர்களும், ரசிகர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இன்று ஐபிஎல்
ரசிகர்களோடு ரசிகர்களாக சென்று ஐபிஎல் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். ஆனால் தமிழக கிரிக்கெட் சங்கமோ மைதானத்துக்குள் கொடி, பேட்ஜ், பேனர் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துவிட்டது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் இதுகுறித்து நாகையில் வேல்முருகன் கூறுகையில் மைதானத்துக்குள் பாம்புகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார். இதனிடையே மைதானத்தை சுற்றி 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications