அதிமுகவிடம் இருந்து ரூ1,500 கோடி வாங்கியதாக சொல்வது பொய்....ஒரு பைசாகூட வாங்கவில்லை: விஜயகாந்த்
மாமண்டூர்: அதிமுகவிடம் இருந்து ரூ1,500 கோடி பணம் வாங்கியதாக சொல்வது பொய்... ஒரு பைசாகூட தாம் வாங்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாண்டூரில் மக்கள்நலக் கூட்டணி- தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:

ஜெயலலிதாவுக்கு எதிரி கருணாநிதி; கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதா; கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் எதிரி இந்த விஜயகாந்த்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரி அவரும் அவரது எண்ணங்களும்தான்... தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்கிறார்கள்.
தற்போதைய ஆட்சியிலேயே டாஸ்மாக் மது கடைகளை மூடி இருக்க வேண்டியதுதானே? இதற்காக சசிபெருமாள் உயிரிழந்தாரே..
எனக்காக சிறை சென்ற குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருகிறேன்... மற்றவர்களிடம் கேட்கமாட்டேன். எனக்கும் திருப்பி அடிக்க தெரியும். ஆனால் மக்கள் கொடுத்த பதவியை மதித்தே அமைதியாக இருக்கிறேன்.
மாமண்டூர் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. ஆகையால் அவர்களுக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும்?
நல்லவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
10 நிமிடம் மட்டும் பேச்சு...
முன்னதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தைப் போல அல்லாமல் பொதுக்கூட்டம் போல வரலாறுகளை நிறைய பேசினார். இதனால் விஜயகாந்த் 9.35 மணியளவில்தான் பேசத் தொடங்கினார்.
ஆனால் அவர், நேரம் இல்லை..நேரம் இல்லை என்றே திரும்ப திரும்ப கூறியதுடன் 10 நிமிடத்திலேயே பேச்சை முடித்துக் கொண்டார். இரவு 10 மணிக்கு கூட்டங்களை முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய உத்தரவு
விஜயகாந்த் பேசுவதற்கு 15 நிமிடம் நேரம் இருந்த போதும் அவர் பேசாமல் உரையை முடித்துவிட்டார். அத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் கோர்வையாகவும் பேசமுடியாமல் ரொம்பவே விஜயகாந்த் திணறித்தான் போனார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications