வினுப்பிரியா தற்கொலை: குற்றவாளி சுரேஷ் சேலம் மத்திய சிறையில் அடைப்பு
சேலம்: வினுப்பிரியா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷை சங்ககிரி 2ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயமணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் சேலம் மத்திய சிறையில் சுரேஷை அடைத்தனர்.
சேலம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, மஞ்சுளா. இவர்களது மகள் வினுப்பிரியா. இவரது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் வெளியிட்டதால் மனமுடைந்த வினுப்பிரியா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோரின் இரண்டு நாள் போராட்டத்திற்குப் பின்னர் வினுப்பிரியாவின் தற்கொலை வழக்கில் விசாரணை சூடுபிடித்தது. பேஸ்புக்கில் ஆபாசமாக புகைப்படத்தை வெளியிட்ட விஷயத்தில் ஐ.பி. எண்ணில் கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த தறி தொழிலாளி சுரேஷ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் வினுப்பிரியாவை, அவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால், பேஸ்புக்கில் வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சுரேஷை கைது செய்து, அவரிடமிருந்து செல்போன், சிம் கார்டு, டேட்டாகார்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவரை சங்ககிரி 2ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயமணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும், ஆபாச படத்தை அளிக்கவும் செல்போன் லஞ்சம் கேட்ட சைபர் கிரைம் தலைமைக் காவலர் சுரேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications