மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் 1912 கன அடி நீர் வரத்து... காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் வினாடிக்கு 1912 கன அடி வீதம் நீர் வந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இரு அணைகளில் இருந்தும் 3,365 கன அடி நீர் நீரை கர்நாடக அரசு திறந்து விட்டது. இந்த நீரானது ஒரு வாரம் கழித்து நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1000 கனஅடியாக நீர் வந்த நிலையில் மேலும் 912 கன அடி அதிகரித்து நேற்று ஒரே நாளில் வினாடிக்கு 1912 கனஅடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 20.48 அடியாக உள்ளது.

மேட்டூர் அணை நீரின் அளவு 4.24 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் நீர் திறந்துவிட்டப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications