எங்களை கொன்று விடுவதாக போன் மூலம் மிரட்டல்... ஏதாவது நடந்தால் எச். ராஜாதான் பொறுப்பு - அய்யாக்கண்ணு
டெல்லியில் பல நாட்களாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை உடனே கைவிடவேண்டும் என்று தொலைபேசிகள் மூலமாக தங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு புகார்
திருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை உடனே கைவிடவேண்டும் என்று தொலைபேசிகள் மூலமாக ஆள் வைத்து மிரட்டுவதாகவும், எங்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் எச். ராஜாவே பொறுப்பு என்றும் அய்யாக்கண்ணு திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார்.

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் ஒருவாரம் கடந்த நிலையில் மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மர்மநபர்கள் சிலர் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது போராடும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு, " டெல்லியில் போராடினால் உங்கள் மீது லாரி கார் ஏற்றி கொன்றுவிடுவோம்.
அரசுக்கு எதிராக போராட உங்களை முஸ்லிம்கள் தூண்டிவிடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தூண்டி விடுகிறார்கள். சென்னைக்கு வா. இங்க வந்து போராடுங்க. எடப்பாடி வீட்டுக்கு அம்மணமா போங்க. ஏன் டெல்லியில மத்திய அரசுக்கு எதிராக போராடுறீங்க. இப்படி போன்ல தினமும் எனக்கு மிரட்டல் வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மிரட்டல் போன் அழைப்புகள் வந்துள்ளன" என்று கூறியுள்ளார்.
எங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் காரணம் என்றும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications