கருணைக் கொலை எதற்காக செய்யப்படுகிறது?... அவசியம் தானா இது? #Euthanasia
கருணைக் கொலைக்கு அனுமதி கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ள உச்சநீதிமன்றம். இந்த நிலையில் கருணைக் கொலை எதற்காக செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
Recommended Video

சென்னை: கருணைக் கொலைக்கு அனுமதி கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ள உச்சநீதிமன்றம். மக்கள் கண்ணியமான முறையில் இறப்பதற்கு உரிமை உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கருணைக் கொலை எதற்காக செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
ஒருவர், எந்த ஒரு மருத்துவ சிகிச்சைகள் வாயிலாகவும் சரிசெய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகுவும் துன்பப்படுகிறார் என்றால், வேறு எந்த நடவடிக்கை வாயிலாகவும் அவரை விடுவிக்க இயலாத வேளையில் அவரை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரைக் மருந்துமூலம் இறந்துவிடுமாறு "கொலை" செய்யும் ஒரு நடைமுறைக்கே கருணைக் கொலை என்று பெயர்.

ஆனால் உலக நாடுகளில் பல கருணைக்கொலையை ஆதரிக்காததன் காரணம் சில சமயங்களில் சொத்துக்காகவோ அல்லது சொந்த ஆதாயத்திற்காகவோ சிலர் இதை அடுத்தவரை கொலை செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் தான். ஒருவேளை கருணைக்கொலை அனுமதிக்கப்பட்டால், பல குடும்பங்களில் பெற்றோரையே சட்டப்படி கருணைக்கொலை செய்யும் வாரிசுகள் பலர் உருவாகிவிட வாய்ப்பும் உண்டு என்பதால் இந்தியாவில் கருணைக் கொலைக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படவில்லை.
கருணைக் கொலைகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறுவோரையும் இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நோயாளிகளை துன்பம் இல்லாமல் கொல்வது கருணைக் கொலை எனப்படுகிறது. கருணைக் கொலை செய்வதை அதற்காக, நடவடிக்கை எடுப்பது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்று இருவகையாக பிரித்துள்ளனர்.
மருத்துவர்களோ அல்லது வேறு நபர்களோ (மருத்துவ உதவியாளர்கள்) நோயாளி மரணமடைவதற்காக திட்டமிட்டு (விஷ ஊசி போடுவது) செய்வது.
நோயாளி உயிர் வாழ்வதற்காக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பது அல்லது செய்து கொண்டிருப்பதை நிறுத்துவது. செயற்கை சுவாசத்தை நிறுத்துவது உள்ளிட்டவை கருணைக் கொலைகளாக பார்க்கப்படுகின்றன.
கருணைக்கொலைகள் செய்ய வேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் பலர் நீதிமன்ற படிகளை ஏறிய போது சட்ட அனுமதி தராத உச்சநீதிமன்றம் முதல் முறையாக மனிதன் கண்ணியமாக இறப்பதற்கு உரிமை உள்ளதாகக் கூறி கருணைக் கொலைக்கு சட்ட அனுமதி அளித்துள்ளது.
-
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!












Click it and Unblock the Notifications