நினைவு சின்னமாகுமா ஜெ. வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் வீடு?
முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் யார் வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலைய இல்லம் உள்ளது. 1967-ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் சந்தியா ஆகியோரால் வாங்கப்பட்ட இந்த இல்லம் சுமார் 24,000 சதுரடி பரப்பளவை கொண்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.44 கோடி என கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா கூறியிருந்தார்.

சுமார் 49 ஆண்டுகள் போயஸ் கார்டனில் வசித்துவந்த ஜெயலலிதா தனக்கு பின்னர் அது யாருக்கு சொந்தமாக வேண்டும் என உயில் எழுதி வைத்ததாக எவ்வித தகவலும் இல்லை. இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதாவுடன் வசித்து வந்த அவரது தோழி சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி ஆகியோர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் தொடர்ந்து போயஸ் கார்டனில் வசித்துவந்தனர்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் சிறை செல்வது உறுதியாகியுள்ளது. இதனால் போயஸ் கார்டன் இல்லம் யார் வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் இல்லம் ஜெ., நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனை ஏற்று போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படுமா அல்லது சசிகலாவின் உறவினர்கள் யாரேனும் தொடர்ந்து போயஸ் கார்டனில் வசிப்பார்களா என்பது விரைவில் தெரியரும்.
முன்னதாக ஒருமுறை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இருந்போது போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் மகள்கள் இருவரும் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications