எம்.ஜி.ஆர். ஏன் இப்படிச் செய்தார்?.. ஆக்கரமிப்பை அகற்ற முடியாத அவலம்!
சென்னை: எம்.ஜி.ஆர். எங்களுக்குக் கொடுத்த நிலம் இது. இங்கிருந்து நாங்கள் போக முடியாது என்று ஆற்றங்கரையோரமாக வசிக்கும் மக்கள் கூறி போராட்டத்தில் குதித்ததால் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் திரும்பிப் போக நேரிட்டது.
சென்னையை கடந்த நவம்பர் - டிசம்பரில் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கி மாநகரமே சிதைந்து போனது. பலர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுத் தப்பியுள்ளனர். பலருக்கு வீடுகள், பொருட்கள் என பலதும் போய் விட்டது.
இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்தவர்கள் கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்து வந்தவர்கள், ஏரி, கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களும், அவர்களால் மற்றவர்களும்தான்.

ஆக்கிரமிப்பு அகற்றம்
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களை பாரபட்சமின்றி அகற்றுமாறு கோர்ட் உத்தரவே உள்ளது. ஆனாலும் அதைச் செய்வதில் பல சிக்கல்கள். குறிப்பாக அரசியல் கட்சிகளின் அரவணைப்பில் இவற்றில் பெரும்பாலான பகுதிகள் உள்ளன.

சக்தி இல்லாமல் திணறும் அதிகாரிகள்
இப்படி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் என சக்தி வாய்ந்த பாதுகாப்பின் கீழ் பல ஆக்கிரமிப்புப் பகுதிகள் உள்ளதால் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

ஆற்றங்கரையோரமாக இடம் ஒதுக்கிய எம்ஜிஆர்
இந்த நிலையில் நந்தம்பாக்கம் பகுதியில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரே குறுக்கே வந்து நிற்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

நந்தம்பாக்கம் பர்மா காலனி
நந்தம்பாக்கம் பகுதியில் பர்மா காலனி பகுதி உள்ளது. இது அடையாறு ஆற்றங்கரைக்கு மேலேயே உள்ளது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன.

வீடுகளை அகற்ற முடிவு
இந்த வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து உதவி செயற் பொறியாளர் தியாகராஜன் என்பவரது தலைமையில் அதிகாரிகள் கணக்கெடுக்கு வந்தனர்.

முற்றுகை - மோதல்
ஆனால் பொதுமக்கள் திரண்டு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகளை அகற்றக் கூடாது என்று கோஷமிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.

எம்.ஜி.ஆர். கொடுத்த இடம்
இதுகுறித்து அந்தப் பகுதி நலச் சங்கத் தலைவரான மனோகரன் என்பவர் கூறுகையில், இது ஆக்கிரமிப்பு இடம் அல்ல. மறைந்த எம்.ஜி.ஆர். எங்களுக்காக ஒதுக்கிய இடம் இது. குடிசை மாற்று வாரியம் மூலமாக வழங்கினார்.

3 கிலோமீட்டருக்குள் இடம் கொடுங்க
இந்த இடத்தை விட்டு போகச் சொன்னால் நாங்கள் போக முடியாது. முடிந்தால் 3 கிலோமீட்டருக்குள் வீடு கொடுங்க. நாங்கள் போகத் தயார். அதுவரை யாரும் போக மாட்டோம் என்று கூறினார்.

தள்ளிக் கொடுத்திருக்கலாமே தலைவரே!
ஒரு வேளை இந்த இடத்தை எம்.ஜி.ஆர். ஒதுக்கியது உண்மை என்றால் சற்றுத் தள்ளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம்.. என்ன செய்வது, சென்னை வெள்ளத்தில் சிக்கி ஆற்றங்கரையோரமாக உள்ள எம்.ஜி.ஆர். வீடும்தான் பாதிப்புக்குள்ளானது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications