'கைரேகையைப் பெற்று ஜெயலலிதா சொத்துக்களையும் கபளீகரம் செய்து விட்டார்களோ?'
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை சட்டவிரோதமாகப் பெற்று, அவரது சொத்துகளை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் அழுத்தமாக உள்ளது என்று முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மர்ம மரணம், அவரது சமாதியின் ஈரம் காயும் முன்பே அவரது அனைத்துப் பொறுப்புகளுக்கும் சசிகலா வரத் துடிப்பது, ஜெயலலிதா மறைந்த பின்னும் வேதா நிலையத்தை சசிகலா அண்ட் கோ ஆக்கிரமித்திருப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று பிஎச் பாண்டியன் மற்றும் அவர் மகன் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை இன்னமும் சசிகலா அண்ட் கோ ஆக்கிரமித்திருப்பது குறித்து பிஎச் பாண்டியன் கூறுகையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா தன் அத்தனை சொத்துகளையும் அதிமுகவுக்கே எழுதி வைத்துள்ளதாக எங்களிடம் கூறினார். தனிப்பட்ட முறையில் அல்ல, பல நிர்வாகிகள் உடனிருக்க அனைவரிடமும் இதைத் தெரிவித்தார்.
ஆனால் இன்று ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வேதா நிலையத்தை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். ஜெயலலிதா இறந்த பின்னரும் எந்த அடிப்படையில் சசிகலா அங்கு தங்கியிருக்கிறார்? அவருக்கு என்ன உரிமையிருக்கிறது? ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்த வீடு கட்சியின் சொத்து. அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த வீட்டை அவரது நினைவில்லமாக்காமல், சசிகலாவே குடியிருப்பது ஏன்? அரவக்குறிச்சி இடைத் தேர்தலுக்கு பயன்படுத்தியதுபோல, அம்மாவின் கைரேகையைப் பயன்படுத்தி அவரது சொத்துகளையும் கபளீகரம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications