பாஜக+பாமக+தமாகா... தமிழக அரசியலில் மேலும் ஒரு கூட்டணி பொறக்கப் போகுது?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிவதற்குள் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகுதோ தெரியவில்லை. அந்த அளவுக்கு தினசரி ஒரு பரபரப்பை மாநிலம் பார்த்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைமையில் புதிதாக ஒரு கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் கூடி வருவது போலத் தெரிகிறது.
யாராலும் சீண்டப்படாமல் போன பாஜகவும், அதே போல யாராலும் கண்டு கொள்ளப்படாமல், மதிக்கப்படாமல் போன தமாகவும் இணைந்து ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுகள் தொடங்கியுள்ளன.

அதிமுகவை நம்பி ஏமாந்து போன கட்சி தமாகா. அதேபோல தேமுதிவையும், கூடவே அதிமுகவையும் நம்பி மோசம் போன கட்சி பாஜக. இந்த இரண்டு பேரும் சேருவதில் எந்த முரண்பாடும் இல்லை என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் தனித்து விடப்பட்ட இருவரும் கை கோர்ப்பார்களா என்ற எதிரபார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கூட்டணியில் இன்னொரு முக்கியக் கட்சியாக பாமக சேரும் என்றும் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. தமாகாவுடன் பேச்சு நடந்து வருவதை தமிழிசை உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம், பாமகவுடன் பேச்சு நடக்கிறதா என்பது குறித்து தகவல் இல்லை.
ஆனால் நடப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதன்படி பாஜக, பாமக, தமாகா இணைந்து தேர்தலை சந்திப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்தக் கூட்டணியில் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இணையலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி உள்ளது. இதில் அதிமுக தவிர 6 கூட்டணிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல திமுகவும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் முக்கியமான அணியாக களத்தில் நிற்கிறது.
பாமகவும், பாஜகவும் தனித் தனியாக தற்போது களத்தில் உள்ளன. இவை தமாகவுடன் இணைந்து கை கோர்த்தால் தமிழகத்தில் 5 முனை போட்டி என்பது மாறி 4 முனைப் போட்டியாக சுருஙகும் வாய்ப்புள்ளது.
-
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications