நீதிமன்றம் கடும் எச்சரிக்கை: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை : நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்குப் பாதகமான புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் வரையற்றுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது, நீட் தேர்வை ரத்துசெய்வது ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டம் வியாழக்கிழமை 4-வது நாளாக நீடித்தது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போராட்டகளத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு இரவும் அங்கேயே உறங்குகிறார்கள். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
எனினும் தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆசிரியர்களுக்கு எப்படி போராட உரிமையுள்ளது.
அரசுக்கும் ஊழியர்களுக்கும் இடையேயான போராட்டத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஏன் நினைக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை அரசு ஊழியர்கள் ஏன் கேலிக்கூத்தாக மாற்றினீர்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட காலஅவகாசம் அளித்து விசாரணை இன்றைக்கே மீண்டும் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்றைய விசாரணையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட தயங்கினார். இதில் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், போராடுவோரை ஒரு மணிநேரத்தில் பணி நீக்கம் செய்ய முடியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து அனைவரும் வெளியேறாவிட்டால் அப்புறப்படுத்தப்படுவர் என கடுமையாக எச்சரித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications