சசிகலா கடிதம் எழுத... ஓபிஎஸ் உறுதியளிக்க... சீறிப் பாயுமா காளைகள்.. எதிர்பார்ப்பில் மக்கள்!
பொங்கல் வரும்போதுதான் ஜல்லிக்கட்டு நினைவுக்கு வரும். அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி சசிகலா கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று ஒபிஎஸ் உறுதியளித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று ஏக்கத்தில் உள்ளனர் மாடுபிடி வீரர்கள்.
தமிழர்களின் வீர விளையாட்டு, பாரம்பரியம் ஜல்லிக்கட்டு. ஆதி தமிழ்க் கூட்டம் நடத்தி வந்த இந்த வீர விளையாட்டு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தடையால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
கடந்த பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று கடைசிவரை எதிர்பார்த்து பின்னர் ஏமாந்ததுதான் மிச்சம். இந்த ஆண்டும் மத்திய அரசு கை விரித்து விட்டது.

மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகவேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், காளைகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா கடிதம்
ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை காக்கம் வகையில் அவசரச் சட்டம் இயற்றவும் கடிதத்தில் சசிகலா வலியுறுத்தியுள்ளார். இந்த வார இறுதியில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடைபெற உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து அவசரச்சட்டம் இயற்ற சசிகலா கோரியுள்ளார்.

ஒபிஎஸ் உறுதி
இந்த கடிதத்தை அதிமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சரிடமும், பிரதமர் அலுவலகத்திலும் அளித்துள்ளனர். இதனிடையே ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் தாண்டுமா?
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு காக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது என்றும் முதன் முறையாக தைரியமாக வாய் திறந்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சசிகலாவின் கடிதம், ஓபிஎஸ் அளித்துள்ள உறுதி காளைகளை வாடி வாசல் தாண்ட வைக்குமா? பார்க்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications