போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்ட ஜெ. உடமைகள்.. முதல்வர் அறையை பயன்படுத்துவாரா ஓ.பி.எஸ்?
தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வருக்கான அறையை பயன்படுத்துவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தலைமை செயலகத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே ஜெயலலிதா இருந்த முதலமைச்சர் அறைக்கு புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாறுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 5ம் தேதி காலமானார்.

பதவியேற்பு
புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அன்று நள்ளிரவே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 31 அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு கடந்த 3 நாட்களாக யாரும் தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

அமைச்சர் பொறுப்பு
ஜெயலலிதாவுக்காக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்ததுள்ளதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா அல்லது ஏற்கனவே அவர் நிதி அமைச்சராக இருந்த அறையிலேயே முதல்வர் பதவியை கவனிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய முதல்வர்
இந்நிலையில், ஜெயலலிதா பயன்படுத்திய வந்த படங்கள், புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய நினைவு சின்னங்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை போலீசார் நேற்று போயஸ் கார்டன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர். தற்போது முதல்வர் அறை காலியாக உள்ளது. புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறைக்கு வரும் 12ம் தேதி மாற வாய்ப்புள்ளது என கிசுகிசுக்கிறார்கள்.

முன்பு அப்படி
கடந்த வருடம், ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, முதல்வர் பதவியை இழந்த போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் அறையை பயன்படுத்தவில்லை. அவர் நிதி அமைச்சராக இருந்த அறையிலேயே இருந்து முதல்வர் பொறுப்புகளை கவனித்தார். அலுவலக வாயிலில் முதல்வர் பன்னீர்செல்வம் என்ற போர்டு கூட வைக்காமல் இருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications