11 மாடிக் கட்டடத்தை குண்டு வைத்துத் தகர்க்க அமைதி இயக்கம் எதிர்ப்பு
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் தரைமட்டமாகி சரிந்த 11 மாடிக் கட்டடத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள இன்னொரு 11 மாடிக் குடியிருப்பை குண்டு வைத்தத் தகர்க்கும் முடிவுக்கு உலக அமைதி மற்றும் ஒற்றுமை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது அமைதியை சீர்குலைக்கும் செயல் என்று அது வர்ணித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான கிஷோர் குமார் என்பவர் கூறுகையில், மவுலிவாக்கத்தில் கடந்த 28ம் தேதி 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். விதிகளை மீறி கட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டடமும் இடியும் நிலையில் உள்ளதாக, அதை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கட்டடத்தை குண்டு வைத்து இடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வைத்து வெடிப்பது என்பது அமைதியை சீர்குலைக்கும் செயல். இதனால் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, விபத்து குறித்து முழுமையான விசாரணை முடியும் வரை இந்த கட்டடத்தை இடிக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு இடிக்கும் பட்சத்தில் குண்டு வைத்து இடிப்பதை தவிர்த்து, பல்வேறு சட்ட நிபுணர்கள், கட்டட நிபுணர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரை கொண்டு வேறு மாற்று வழியில் இடிப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications