For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக்கில் குடிக்க வந்த இடத்தில் தகராறு... தலையில் அடித்து வாலிபர் படுகொலை

Google Oneindia Tamil News

சென்னை: பூந்தமல்லி அடுத்துள்ள காரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் ஒருவர் தலையின் பின்புறம் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வாலிபரின் பெயர் பாண்டி (35) என்று தெரிய வந்துள்ளது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போரூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

Youth beaten to death near Porur

அவர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து தினமும் மது அருந்தி சென்றுள்ளார். மதுகுடிக்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் அவரை யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவரை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Youth beaten to dear near Porur, Police mooted enquiry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X