இட ஒதுக்கீடு மூலம் கல்வி அறிவை பெற்றவர் அண்ணாமலை.. கலைஞரை பற்றி பேச வேண்டாம் -செஞ்சி மஸ்தான் அறிவுரை
தஞ்சாவூர்: இட ஒதுக்கீடு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல், கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்
நிகழ்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி. மஸ்தான், 162 கிறிஸ்துவ, இஸ்லாமிய பயணாளிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் தையல் எந்திரம், விலையில்லா கிரைண்டர் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலம் இந்த வழக்கில் விரைவில் தீர்வு காண முடியும். இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும், அமைதியான சூழலும் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலைக்கு அறிவுறை
தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய அமைச்சர் செஞ்சி. மஸ்தான், ''இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல், கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும்'' என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''அண்ணாமலை கல்வி அறிவை பெற்றது அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தான்.

மேன்மையாக பேச வேண்டும்
இவ்வாறு அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை, அவர்களை விமர்சனம் செய்யாமல் கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications