இட ஒதுக்கீடு மூலம் கல்வி அறிவை பெற்றவர் அண்ணாமலை.. கலைஞரை பற்றி பேச வேண்டாம் -செஞ்சி மஸ்தான் அறிவுரை
தஞ்சாவூர்: இட ஒதுக்கீடு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல், கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்
நிகழ்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி. மஸ்தான், 162 கிறிஸ்துவ, இஸ்லாமிய பயணாளிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் தையல் எந்திரம், விலையில்லா கிரைண்டர் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலம் இந்த வழக்கில் விரைவில் தீர்வு காண முடியும். இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும், அமைதியான சூழலும் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலைக்கு அறிவுறை
தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய அமைச்சர் செஞ்சி. மஸ்தான், ''இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல், கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும்'' என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''அண்ணாமலை கல்வி அறிவை பெற்றது அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தான்.

மேன்மையாக பேச வேண்டும்
இவ்வாறு அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை, அவர்களை விமர்சனம் செய்யாமல் கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications