94 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோர விபத்து.. தஞ்சை தேர் திருவிழா விபத்து நடந்தது எப்படி?
தஞ்சை: தஞ்சையில் அப்பர் குருபூஜை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து நடைபெற்றது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
தஞ்சை மாவட்டத்தில் களிகாடு பகுதியில் உள்ளது அப்பர் கோயில். இங்கு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜையையொட்டி சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தேர் நள்ளிரவில் இழுக்கப்பட்டு அதிகாலை 3 மணி வரை நிகழ்வு நடைபெறும்.
இதுவரை 93 ஆண்டுகள் வெற்றிகரமாக இந்த தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு 94 ஆவது ஆண்டு விழா தொடங்கியது. நேற்று முதல் 3 நாட்களுக்கு இந்த விழா கோலாகலமாக நடைபெறும்.

தேர் பவனி
இந்த விழாவில் முதல் நிகழ்வே தேர் பவனிதான். இது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 முதல் 4 மணிக்குள் முடிவடையும். சிறிய சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஜெனரேட்டர்
தேர் இழுத்து செல்லப்பட்ட வண்டியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்தது. தேர்த் திருவிழாவின் போது தேரை இழுப்போரின் கால்களுக்கு மக்கள் தண்ணீரை ஊற்றுவது வழக்கம். இந்த நிலையில் ஒரு இடத்தில் தேரை திருப்புவதற்காக பக்தர்கள் முயற்சித்தனர்.

உயர் மின் அழுத்த கம்பிகள்
அப்போது மேலே உயர்மின் அழுத்த கம்பிகள் தேரின் மீது உரசாமல் இருக்க அதை சரி செய்தனர். அப்போது ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த தேரின் ஒரு பகுதி லாக்காகிவிட்டது. இதனால் எடை தாங்கமுடியாமல் தேர் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டு உயர் மின் வயரில் உரசியது.

தேரை வடம் பிடித்தவர்கள்
அப்போது தேரை வடம் பிடித்தவர்கள், தேரில் அமர்ந்து தீபாராதனை காட்டியவர்கள், தண்ணீர் ஊற்றிக் கொண்டு வந்தவர்கள் என அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 11 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இந்த தேர் திருவிழாவிற்கு தீயணைப்பு துறையினரிடம் முன் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

94 ஆண்டுகளில் முதல் முறை
ஊரில் எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்னிருந்து செய்யும் முன்னாள் ராணுவ வீரர் பிரதாப், செல்வம் ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய மண்டல ஐஜி விசாரணை நடத்தி வருகிறார். 94 ஆண்டுகளில் முதல்முறையாக இது போன்ற ஒரு விபத்து ஏற்பட்டு அனைவரது மகிழ்ச்சியையும் அழுகைகளாலும், கதறல்களாலும் மாற்றிவிட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications