Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணத்தையே கலக்கிய "ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.." 12 சொகுசு கார் பறிமுதல்.. 7 தனிப்படை.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: கும்பகோணத்தை கலக்கி வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது 600 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்

Recommended Video

    Kumbakonam Helicopter Brothers-ஐ தேடும் Police பின்னணி | Oneindia Tamil

    கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன். இருவரும் சகோதரர்கள்.

    கிரிஷ் பால் பண்ணை, விக்டரி பைனான்ஸ் என்ற பெயர்களில் இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். வெளி நாடுகளிலும் நிறைய தொழில் செய்து வந்துள்ளனர்.

    சொந்த ஹெலிகாப்டர்

    சொந்த ஹெலிகாப்டர்

    பணம் செழித்ததால், சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அதில் வலம் வரும் அளவுக்கு போய் விட்டனர். இதனால், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்று அவர்கள் மக்களால் அழைக்கப்பட்டனர். விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ரூ. 1 லட்சத்திற்கு ஒரு வருடத்தில் கூடுதலாக ரூ 82,000 தரப்படும் என்று இவர்கள் கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டனர். இதை நம்பி நிதி வசூல் குவிந்தது. ஆரம்பத்தில், சரியாக பணத்தை திருப்பி கொடுத்ததால் தொழில் அதிபர்கள், வணிகர்கள் என பலரும் இந்த ஹெலிகாப்டர் பிரதர்களிடம் கோடிக் கணக்கில் முதலீடு செய்தனர்.

    பாஜகவில் இணைந்தார்

    பாஜகவில் இணைந்தார்

    இந்த நிலையில்தான், ஹெலிகாப்டர் பிரதர்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷ் பாஜகவில் இணைந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட வர்த்தக தலைவர் பதவி கொடுத்தது பாஜக. கும்பகோணத்துக்கு வரும் பாஜக பிரமுகர்கள் பலரும் ஹெலிகாப்டர் பிரதர் வீட்டிற்கு சென்றும் வரும் அளவிற்கு செல்வாக்கு உயர்ந்தது.

    600 கோடி மோசடி போஸ்டர்கள்

    600 கோடி மோசடி போஸ்டர்கள்

    இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் முதலீடு செய்தவர்களுக்கு பணம் சரியாக திருப்பி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு என்ற தம்பதியினர் தங்களிடம் ரூ.15 கோடி வாங்கி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்து விட்டதாக கூறிய புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கும்பகோணம் நகரம் முழுவதும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் ரூ.600 கோடி மோசடி செய்து விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதையடுத்து எம்.ஆர்.கணேஷை பாஜகவிலிருந்து நீக்குவதாக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.

     3 பிரிவுகளில் வழக்கு

    3 பிரிவுகளில் வழக்கு

    இந்த நிலையில்தான், ஹெலிகாப்டர் சகோதர்கள் மீது மூன்று பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் ஆகியோர் மீதும் 120 பி, 406, 420 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

    7 தனிப்படைகள்

    7 தனிப்படைகள்

    இந்நிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தலைமையில் எஸ்பி தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டில் இருந்த 2 பிஎம்டபிள்யூ உட்பட, 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்று தஞ்சை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஏகப்பட்ட ஆவணங்கள், மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் பிரதர்ஸை கைது செய்வதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+