களமிறங்கிய ஓபிஎஸ் மகன்கள்.. தேனி மாவட்டத்தை கலக்குகிறார்கள்
தேனி மாவட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஓபிஎஸ் மகன்கள்
Recommended Video

தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் இருவருமே தேனி மாவட்டத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்கள்.
ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்மூலம் அவர் அரசியல் களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார். ஆனால் திடீரென அவரிடமிருந்து
பதவியை ஜெயலலிதா பறித்து விட்டார். இவர் மீது பல புகார்கள் வலம் வந்தன. என்றாலும் இவரை தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து எப்படியாவது அரசியல் வாரிசாக உருவாக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஓபிஎஸ். தற்போது இவருக்கு கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது.

ரவீந்திரநாத் படம்
சமீபத்தில்கூட தேனி மாவட்டத்தில் "தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் தொடங்கினார்கள். இது சம்பந்தமாக ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதில் ரவீந்திரநாத் படமும் இடம் பெற்றது.

கருப்பண சாமி கோவில்
இவர் இப்படி என்றால், ஓ.பி.எஸ்ஸின் 2-வது மகனான ஜெயபிரதீப்பும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். பெரியகுளத்தில் எங்கு என்ன நிகழ்ச்சி நடந்தாலும் அதில் கொஞ்ச நேரமாவது தலையை காட்டிவிட்டு வருகிறார். கன்டமனூர் அருகே உள்ள கருப்பண சாமி கோவிலுக்கு குதிரையும் கோவில் கட்டிடங்களையும் கட்டி தருவதாக அந்த மக்களுக்கு பிரதீப் வாக்கும் தந்துள்ளார்.

நேரம் இல்லை
அதேபோல தற்போது கஜா புயல் நிவாரண பணிகளிலும் புயல் வேகத்தில் இவர் இறங்கி உள்ளார். மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஓபிஎஸ் சென்று கொண்டிருப்பதால், தன் சொந்த தொகுதியை அவரால் கவனிக்கவே முடிவதில்லை. அதனால் இந்த பொறுப்பை பிரதீப் ஏற்றுள்ளார்.

10 கிலோ மீட்டர்
சோத்துப்பாறை வழியாக கணக்காய் வரை சென்று மக்களை சந்தித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டு பகுதியில் நடந்தே சென்று சொக்கர் அலைமலை கிராம மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி உள்ளார். அவருடன் கட்சிக்காரர்களும் சென்றிருக்கிறார்கள்.

நம்பிக்கை வார்த்தைகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுபொருள், நிவாரண உதவி என எல்லாமே தந்துவிட்டு வந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் என்ன உதவி கேட்டாலும் அவர்கள் அடிப்படை பிரச்சனை தீர எதுவானாலும் செய்கிறேன் என்று நம்பிக்கையும் தந்திருக்கிறார். இதை கேட்டு மக்கள் எல்லோரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

செல்வாக்கு எப்படி?
எப்படியோ, ஓபிஎஸ் மகன்கள் இருவருமே கட்சிக்குள் தீவிரமாக இறங்கி விட்டது போல தெரிகிறது. தேனி மாவட்டத்தில் இவர்கள் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்று முன்னணியில் வருவார்கள் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications