தின்பண்டங்கள் கிடையாதுனு பட்டியலின மாணவர்களை விரட்டிய தென்காசி பெட்டிக்காரர் கைது.. கடைக்கும் சீல்
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் பட்டியலின மாணவர்களிடம் தீண்டாமை காட்டிய பெட்டிக் கடைக்காரர் மகேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அது போல் ஒரு பிரிவை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள ஒரு கடையில் அவர்கள் தினமும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அது போல் நேற்றைய தினம் தேன் மிட்டாய், குருவி ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.

விரட்டும் பெட்டிக் கடைக்காரர்
அப்போது அந்த கடைக்காரர், சிறிதும் மனசாட்சியின்றி, "இந்த உள்ளூர் கடையில் தின்பண்டங்கள் யாரும் வாங்கக் கூடாது, நீங்கள் ஸ்கூலுக்கு போங்க, சரியா, உங்க வீட்லயும் எல்லாரிடமும் சொல்லுங்கள், தின்பண்டங்கள் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு! என்கிறார்.

என்ன கட்டுப்பாடு
அதையும் மீறி அந்த குழந்தைகள் அங்கேயே நிற்கிறார்கள். அதற்கு அந்த கடைக்காரர், கொடுக்க மாட்டோம்டா, இந்த ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு என்கிறார். அதற்கு அந்த குழந்தைகள் கட்டுப்பாடா அப்படின்னா என கேட்கிறார்கள். அதற்கு அவர் , ஆமாம் ஊரில் கூட்டம் போட்டு உங்களுக்கு தின்பண்டங்கள் கொடுக்கக் கூடாது என பேசியுள்ளார்கள் , சரியா போங்க என்கிறார். அந்த குழந்தைகளும் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

குழந்தைகள் வீடு
அந்த குழந்தைகள் வீட்டில் சொல்லி அவர்களின் பெற்றோர் வந்து கேட்ட பிறகும் அந்த கடைக்கார் நெருப்பை உமிழ்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்காசி எஸ் பி கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீஸாார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டியலினத்தவர்களுக்கு கட்டுப்பாடு
பட்டியலினத்தவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததாக ஒரு பிரிவை சேர்ந்த ராமசந்திரமூர்த்தி என்பவரிடம் போலீஸாார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மாணவர்களை அவமானப்படுத்தவிட்டு தலைமறைவாக உள்ள பெட்டிக் கடை உரிமையாளர் மகேஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். அவருடைய பெட்டிக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. கடைக்காரர் விரட்டுவதும் குழந்தைகள் கவலை தோய்ந்த முகத்துடன் செல்வதும் பார்ப்போரை கலங்கடிக்கச் செய்துவிட்டது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications