Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழச்சேரி பள்ளி மாணவி மரண வழக்கு..பள்ளி, விடுதியில் சிபிசிஐடி அதிகாரி திரிபுரசுந்தரி விசாரணை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர் : திருவள்ளுர் அருகே கிழச்சேரி பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்கு சொந்தமான தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்தார்.

Tiruvallur student death case. Tripurasundari appointed as CBCID investigation officer

இன்று காலையில் விடுதியில் மாணவியின் உடல் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாணவியின் மரணம் தொடர்பாக உண்மை தன்மை வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெக்கலூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மாநில நெடுஞ்சாலையில் புறப்பட்டனர்.

இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோர்கள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், பள்ளி மாணவர்களின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி சத்யபிரியா தகவல் தெரிவித்துள்ளார். +2 மாணவியின் உடல் தூக்கிலிட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி சிறிது நேரத்தில் விசாரிக்க உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Recommended Video

    Thiruvallur School Hostel-ல் +2 மாணவி தற்கொலை... மக்கள் சாலை மறியல் *Tamilnadu

    கீழச்சேரியில் பள்ளி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+