சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 550 கொடிக் கம்பங்கள் அகற்றம்.. ஹைகோர்ட்டில் திருப்பூர் மாநகராட்சி பதில்
திருப்பூர்: சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 550 கொடி கம்பங்களை அகற்றி உள்ளதாக திருப்பூர் மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்து முன்னேற்ற கழகத் தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் கொடிக்கம்பங்களை அமைத்திருப்பதாகவும், விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் கொடிக்கம்பங்களை நடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திருப்பூர் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணியினர் வைத்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவிற்கு முரணாக கொடிக்கம்பங்களை வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கொடிக் கம்பங்களை அகற்றும்படி மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், திருப்பூரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி உள்ளிட்டடோரின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திருப்பூர் மநகராட்சியில் வைக்கப்ப்பட்ட 600 சட்டவிரோத கொடிக் கம்பங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 550 அகற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மீதமுள்ள சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுமாறு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications