Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனியர் Vs ஜுனியர்! முக்கிய பதவிகளுக்கு திருச்சி திமுகவில் மல்லுக்கட்டு! முட்டி மோதும் உ.பி.கள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கட்சியில் மாநகர் மாவட்ட அளவில் முக்கிய பதவிகளை பிடிப்பதற்காக திருச்சி திமுகவில் அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் முட்டி மோதி வரும் நிலையில், உட்கட்சி தேர்தல் விவகாரம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகள் தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு வரையறையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

 திமுக உட்கட்சி தேர்தல்

திமுக உட்கட்சி தேர்தல்

தற்போது மாநகர, வட்ட செயலாளர் தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் நடைபெற்று வருகின்றன. பகுதி செயலாளர் நியமன பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் ஒன்றிய செயலாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் என தெரிய வருகிறது. இந்த தேர்தல்கள் முடிவற்ற பின்னர் மாநகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர் தேர்தல், அதன்பிறகு திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

 நிர்வாகிகளிடையே போட்டி

நிர்வாகிகளிடையே போட்டி

தமிழகம் முழுவதும் புதிதாக பதவிகளை கைப்பற்ற திமுக நிர்வாகிகளிடையே போட்டி நிலவும் நிலையில் ஒரே மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வேறு வேறாக இருக்கும் மாவட்டங்களிலும், ஒரே மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்களிலும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் பதவிகளை கைப்பற்றுவதில் இருதரப்பு ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவில் வரும் நிலையில் உட்கட்சித் தேர்தல் தீவிரம் அடைந்துள்ளது.

திருச்சி மாவட்ட திமுக

திருச்சி மாவட்ட திமுக

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட அளவிலான பதவிகளை கைப்பற்றுவதற்கு திமுகவின் முக்கிய அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்ட திமுக தற்போது வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 36 வார்டுகள் தெற்கு மாவட்டத்திலும் 29 வார்டுகள் மத்திய மாவட்டத்திலும் இருக்கின்றன. மாநகர திமுக ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலையில் தற்போது மத்திய, தெற்கு என செயல்பாடுகள் ரீதியாக இரண்டாகவே உள்ளது.

Recommended Video

    Tribute to Kalaignar Karunanidhi | 4th year memorial | Oneindia Tamil
    கடும் போட்டி

    கடும் போட்டி

    தற்போது பகுதி செயலாளர்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நிறைவடைந்து அறிவிப்புகள் வெளியாக இருக்கும் நிலையில் மாவட்ட அளவிலான மற்ற பதவிகளை கைப்பற்றுவதற்கு அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்களிடையே போட்டி உள்ளது. மாநகராட்சி மேயர் தேர்தலின் போதே திமுகவில் இருவருடைய மோதல் வெளிப்படையாக இருந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான அன்பழகன் மேயராக நியமிக்கப்பட்டார். இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்கள் சற்றே அதிருப்தி அடைந்தாலும் தற்போது மாவட்ட அளவிலான குறிப்பாக மாநகர பகுதிகளில் இருக்கும் பதவிகளை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் திருச்சி மாவட்ட திமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+