திருச்சியில் சோகம்.. 2 வயது மகனுடன் குளியலறையில் தீக்குளித்து தற்கொலை செய்த கர்ப்பிணி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: உப்பிலியபுரம் அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (30). லாரி டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). இவர்களின் மகன் கமலேஷ் (2). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.

தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். வேல்முருகன் தனது மனைவி, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 15-ஆம் தேதி வேல்முருகன் தருமபுரிக்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

 மண்ணெண்ணெய்

மண்ணெண்ணெய்

இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள குளியலறைக்கு தனது மகனுடன் சென்ற ரஞ்சனா, கதவை தாழிட்டு கொண்டார். பின்னர் தனது உடலிலும், மகனின் உடலிலும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் இருவர் உடலிலும் தீ பற்றி எரிந்தது. வலியால் அவர்கள் அலறி துடித்தனர்.

 குளியலறை

குளியலறை

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து குளியலறையின் தாழ்ப்பாளை உடைத்து பார்த்தனர். அப்போது தாய், மகன் இருவரும் எரிந்து கொண்டிருந்தனர். உடனே தீயை அணைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

 குளியலறை

குளியலறை

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து குளியலறையின் தாழ்ப்பாளை உடைத்து பார்த்தனர். அப்போது தாய், மகன் இருவரும் எரிந்து கொண்டிருந்தனர். உடனே தீயை அணைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

 முதலுதவி சிகிச்சை

முதலுதவி சிகிச்சை

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே கமலேஷ் இறந்துவிட்டான். ரஞ்சனா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

 ரஞ்சனாவின் கணவர்

ரஞ்சனாவின் கணவர்

மேலும் தருமபுரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனாவின் கணவர் வேல்முருகனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து வேல்முருகன் மற்றும் ரஞ்சனாவின் மாமனார், மாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஞ்சனா, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+