ஆதரவற்றோருக்கு அரவணைப்பு... கருணையுடன் உதவிக்கரம் நீட்டும் திருச்சி பெண் வழக்கறிஞர்
திருச்சி: திருச்சியில் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் இரவல் பெறுவோரை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்து வருகிறார் பெண் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஜெயந்தி ராணி.
திருச்சியை பொறுத்தவரை தமிழகத்தின் மத்திய பகுதியாக திகழ்வதால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய ஊர்களில் ஒன்றாக திகழ்கிறது. அங்குள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, அரசு மருத்துவமனை, உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட பலர் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டுகிறது பெண் வழக்கறிஞர்கள் குழு.

இதேபோல் சாலையோர பிளாட்பார்ம்களில் தங்கி இரவல் பெறுவோரை மீட்டு அவர்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தேவையான உதவிகளை செய்யவும் இந்த வழக்கறிஞர்கள் குழு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்திராணி, சித்ரா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இரவல்பெறுவோர் மறுவாழ்வு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிபவர்கள் பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கான காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனை அருகே மனநலமின்றி சாலையோரம் வசித்து வந்த வடமாநில பெண் ஒருவரை மீட்டு அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications