திருச்சி.. பேராசிரியர் செய்த பாலியல் சேட்டை.. உதவிய பேராசிரியை.. குமுறிய மாணவிகள்.. பரபரப்பு கடிதம்
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பேராசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் சிலர், கல்லுாரி முதல்வரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் சந்திரமோகன் மீது பல புகார்கள்
அந்த புகாரில் கூறியுள்ள சில திடுக்கிடும் தகவல்கள் இதுதான்- பாடம் நடத்தும்போது நெருக்கமாக அமர்ந்து கொள்வார், பாலியல் சீண்டல்கள் செய்வார், ஆபாசமாக இரட்டை அர்த்தத்துடன் பேசுவார், மாணவிகளை அருகே கூப்பிட்டு கண்ட இடத்தில் கை வைத்து, சில்மிஷம் செய்வார், அவரது அறைக்கு தனியாக வரச்சொல்லி வழிய வழிய பேசுவார் என்று தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை துறை தலைவர் தந்து வருவதாக கடிதத்தில் கூறப்பட்டது.

பெண் பேராசிரியர்
பேராசிரியல் பால் செய்யும் இந்த பாலியல் சீண்டல்களுக்கு பெண் பேராசிரியர் நளினி என்பவர் துணை போவதாகவும், இதன் காரணமாக தாங்கள் கல்லுாரிக்கு வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் தொிவிப்பதாகவும் அந்த கடிதத்தில் குற்றம்சாட்டி உள்ளனர்.

விசாரணை குழு
இதனை தொடர்ந்து கல்லுாரி நிர்வாகம் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையில், துணை முதல்வர் உள்ளிட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழுவானது மாணவிகளிடமும், கல்லுாரி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நிர்வாகத்திடம் தாக்கல் செய்துள்ளது.

பேராசிரியர் பணியிடை நீக்கம்
இதன் அடிப்படையில் தமிழ்துறை தலைவர் நேற்று பேராசிரியர் பால் சந்திரமோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை கூடுதல் துணை கமிஷனர் வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் ஆலோசனை
விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை இந்தப் பாலியல் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் புகழ் பெற்ற கல்லுாரி ஒன்றில் மாணவிகள் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளான சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications