வேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்,வேளாண் சட்ட நகலை ராக்கெட் போல செய்து மோடிக்கு அனுப்புவது போல் பறக்கவிட்டு முழக்கமிட்டனர்.
திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவும், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 5ம் நாளாக இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவும், நிபந்தனையின்றி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் தனது ஒரு பக்க தாடி மற்றும் மீசையை மழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
#WATCH | Tamil Nadu: Farmers' union in Tiruchirapalli stage protest against new farm laws by flinging paper planes with their demands written on it.
— ANI (@ANI) November 30, 2020
"We tried to go to Delhi but police stopped us. Centre must take back the new farm laws," says a farmer. pic.twitter.com/AW1MvZCkKG
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்ட நகலை ராக்கெட் போல செய்து மோடிக்கு அனுப்புவது போல் பறக்கவிட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவருகின்றனர். நல்ல தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அய்யக்கண்ணு கூறியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications