தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. 11-ம் கட்ட விசாரணை இன்று முதல் தொடக்கம்.. 73 பேருக்கு சம்மன்
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 11-ம் கட்ட விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போன வருடம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வெடித்த கலவரத்தில், துப்பாக்கி சூடு நடைபெற்றது, அதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த, தமிழக அரசின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் என 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி 10-ம் கட்ட விசாரணைக்காக 268 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் விசாரணையும் நடந்து முடிந்தது.
இந்நிலையில், 11-ம் கட்ட விசாரணை இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் இந்த விசாரணை வரும் 20-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சம்மன் அனுப்பப்பட்ட 73 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications